கிருஷ்ணகிரி : நிலத்தகராறில் கட்டையால் அடித்து பெண் கொலை.! போலீசார் வலைவீச்சு - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தகராறில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாதம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கோவிந்தராஜ் இறந்துவிட்ட நிலையில், மாதமமாளுக்கும் கோவிந்தராஜன் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் பொதுவான இடத்தில் சரவணன் வைத்திருந்த மின்மோட்டார் இணைப்பை நேற்று மாதம்மாள் துண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்த சரவணனின் மைத்துனர், வாக்குவாதம் முக்கியதால் ஆத்திரமடைந்து மாதமாளை மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.

இதையடுத்து பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாதம்மாள் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாதம்மாள் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நிலத் தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற ரமேஷை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman murder in land dispute in kirishnagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->