காரமடை அருகே பரிதாபம்.! காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே கோப்பனாரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கருப்பாத்தாள்(59) வழக்கம் போல் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது முட்புதரில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென கருப்பாத்தாள் நோக்கி ஓடி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த இவர், யானையிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே யானையின் பிடியில் சிக்கிய கருப்பாத்தாள், யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் கருப்பாத்தாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman killed in elephant attack in kovai karamadai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->