புதுக்கோட்டை அருகே பரிதாபம்.! மின்னல் தாக்கி பெண் பலி..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதி ஒத்தாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கோபு. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வித்யா (31). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கொத்தமங்கலம் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்பொழுது வித்யா வீட்டு வாசலில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். 

அப்போது திடீரென மின்னல் தாக்கி வித்யா கீழே சுருண்டு விழுந்துள்ளார். இந்த இடத்து அக்கம் பக்கத்தினர் வித்யாவை மீட்டு சிகிச்சைக்காக கொத்தமங்கலம் அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு வித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman killed by lightning in Pudukkottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->