100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.! பெண் பலி, 21 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 22 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சுற்றுலா வந்துவிட்டு, அங்கிருந்து வேனில் பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தவன் 5வது கொண்டை ஊசி வளைவில் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 22 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மாரியம்மாள் (45) என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman killed and 21 injured in van overturning in a 100 feet ditch in Kodaikanal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->