கனமழை - பல்லாவரத்தில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.! - Seithipunal
Seithipunal


கனமழை - பல்லாவரத்தில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.!

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மனைவி சத்தியவாணி. வீட்டு வேலைகள் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

இந்த நிலையில், சத்தியவாணி வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறிவிட்டு வீட்டின் மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கியுள்ளார். அப்போது இவரது பக்கத்து வீட்டின் சுற்றுசுவர் திடீரென இடிந்து, மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த சத்தியவாணி மீது விழுந்தது. 

இதில் படுகாயம் அடைந்த சத்தியவாணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் மாடியில் தூங்க சென்ற மனைவி கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த கன்னியப்பன், மாடிக்கு சென்று பார்த்த்துள்ளார்.

அப்போது சத்தியவாணி மீது பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்து அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் விரைந்து வந்து சத்தியவாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died for wall collapse in pallavaram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->