கோவை || பெற்றோருக்கு உதவ சென்ற மகள்.! எமனாக வந்த தென்னை மரம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கோவை || பெற்றோருக்கு உதவ சென்ற மகள்.! எமனாக வந்த தென்னை மரம் - நடந்தது என்ன?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம் பூண்டி சாலையை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகள் இளமதி. இவர் தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இவருக்கு நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் பெற்றோருக்கு உதவி செய்வதற்காகத் தோட்டத்திற்குச்  சென்றுள்ளார். அங்கு இளமதி பசுந்தீவனத்தை எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தென்னை மரம் ஒன்று முறிந்து இளமதி மீது விழுந்துள்ளது. இதில் பலத்தக் காயமடைந்த இளமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் ஓடிவந்து தன் மகளை கட்டியணைத்து கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி விரைந்து வந்த ஆலாந்துறை காவல்துறையினர் இளமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman died for coconut tree fell on body in coimbatore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->