கணவனை பிரிந்து மகனுக்கு காதணி விழா வைத்த பெண் மருத்துவர்..!! உறவினர்களின் கேள்வியால் தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


குழந்தையின் காதுகுத்து விழாவிற்கு கணவன் வராததால் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, சுப்பிரமணியபுரம்  பகுதியில் வசித்து வருபவர் கோகுல். இவருக்கு திருமணமாகி சஞ்சினி  என்ற மனைவியும் 2 வயதில் ஆண்குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கோகுல் தொட்டியத்தில் தனியாக மருத்துவமனை வைத்துள்ளார். அவர் மனைவியும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கிடையே மனகசப்பு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராற்றால் இருவரும் கடந்த 4 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் சஞ்சினி தனது மகனுக்கு காதுகுத்து வைத்துள்ளார். இந்த விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்துள்ளனர். ஆனால் கோகுல் மட்டும் வரவே இல்லை.

இதுகுறித்து நண்பர்களும் உறவினர்களும் கேள்வி எழுப்பியதால் சஞ்சினி மிகுந்த மன அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு சென்ற அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to family issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->