காதலன் திருமணத்திற்கு மறுத்தால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. காதலன் கைது..! - Seithipunal
Seithipunal


காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கீர்த்திகா. இவருக்கு கடலூரை சேர்ந்த சுதீஷ் என்ற இளைஞருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை அடுத்து, கீர்த்திகா திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு சதீஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. நெருங்கி பழகி விட்டு திருமணத்திற்கு மறுத்தால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 25ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சதீஷை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம்  அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman committed suicide


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->