தகாத உறவுக்கு தடையாக இருந்த மாமியார் - மருமகள் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தகாத உறவுக்கு தடையாக இருந்த மாமியார் - மருமகள் செய்த கொடூரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த பாண்டியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். ஆட்டோ ஓட்டுனரான இவர் ஒரு விபத்தில் காலை இழந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே  இருந்து வந்துள்ளார். இவரது மனைவி சங்கீதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 

இந்த நிலையில், சங்கீதாவுக்கு சில ஆண்களுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது குறித்த தகவல் அவரது மாமியார் சின்னபாப்பாவுக்கு தெரிய வந்ததால் சங்கீதாவை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த சங்கீதா சின்னபாப்பாவை கீழே தள்ளி மரக்கட்டையால் மாமியார் சின்ன பாப்பாவின் தலையில் அடித்துள்ளார். இதனால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னபாப்பாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் சங்கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for kill mother in law in vilupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->