அண்ணாமலை போனா என்ன...பா.ஜ.க-வுக்கு ஒரு பாதிப்பும் இல்ல...! - நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி பதிலடி
What if Annamalai goes there no harm BJP Nainar Nagendran sharp response
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரசியல் அரங்கில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்திருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், அண்ணாமலையின் விலகல் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அவர், "பாரதிய ஜனதா கட்சி என்பது திடீரென உருவான அமைப்பு அல்ல. உறுதியான கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்த தேசிய இயக்கம்.

ஒருவரின் விலகலால் கட்சியின் செயல்பாடுகளிலோ வளர்ச்சியிலோ எந்த பின்னடைவும் ஏற்படாது" என்று தெரிவித்துள்ளார்.மேலும், பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு பயணத்திலும் தமிழ்மொழியின் பெருமை, தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டு சிறப்புகளை உலக அரங்கில் எடுத்துரைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் தொன்மைச் சுவடுகள் மற்றும் வரலாற்றுப் பெருமைகளை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், தமிழக மக்களின் முன்னேற்றத்தில் பாஜக தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.
அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் முயற்சி குறித்து கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், "ஜனநாயக நாட்டில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.
அந்த முயற்சி எதிர்காலத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காலத்தின் போக்கே வெளிப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும், அதுகுறித்த பாஜக தலைமையின் நிலைப்பாடும் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
English Summary
What if Annamalai goes there no harm BJP Nainar Nagendran sharp response