மாணவியை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்.. நடந்தது என்ன ..?
What happened to the student saved by Instagram?
தற்கொலைக்கு முயன்ற மாணவியை இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா காப்பாற்றியுள்ளது போலீசாருக்கு இன்ஸ்டாகிராம் பதிவு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த 21 வயதான ஒரு மாணவிக்கு பெற்றோர் வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். முதுநிலை இறுதியாண்டு படித்து வரும் அந்த மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.இந்தநிலையில் விருப்பம் இல்லாத திருமணத்தால் மனவேதனையில் இருத்த மாணவி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் "குட்பை சாரி அம்மா அப்பா" என்று கூறி மாத்திரைகளின் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார்.
16-ந்தேதி இரவில் 7.42 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பதிவு குறித்து, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா உடனே அந்த பதிவு குறித்து மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.
உடனடியாக தகவல் கிடைத்ததும் போலீஸ் டிஜி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவலை கடத்தி இளம்பெண்ணின் தற்கொலை முயற்சியை தடுத்தனர்.உடனே அந்த மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.
அந்த இளம் பெண் தனது கல்வியில் கவனம் செலுத்த விரும்பினார், ஆனால் அவரது பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அவர் இந்தப் பதிவை வெளியிட்டார். தற்போது இந்த விஷயத்தை அமைதியாக தீர்க்க ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.
English Summary
What happened to the student saved by Instagram?