தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு மழையால் நீர்வரத்து 6000 கனஅடியாக அதிகரித்துள்ளது...! - Seithipunal
Seithipunal


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக, தருமபுரியில் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நேற்று 4000 கனஅடி தண்ணீர் அதிகரித்துள்ளது.இந்நிலையில் கர்நாடகா-தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி,  நாட்றாம் பாளையம்,கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நேற்று பெய்துள்ளது.

இதனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 6000 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.இதில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி,ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் அழகாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து, பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு, காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்பு, அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் உற்சாகமாக மகிழ்ந்தனர்.

மேலும் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்,காவிரி ஆற்றின் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

water inflow to Dharmapuri Okenakkal has increased to 6000 cubic feet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->