எப்பா எப்பா! தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43000 கனஅடியாக குறைவு...! இருப்பினும்...?
water flow to Dharmapuri Okenakkal has decreased to 43000 cubic feet BUT
கர்நாடகா மற்றும் கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள், ஏரிகள் என அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35,999 கனஅடி நீர் வந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 36,049 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.இதனால்,கபினி அணைக்கு நேற்று இரவு நீர்வரத்து 30000 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும், நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 66,049 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 58000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அவ்வகையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 43000 கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை காவலர்கள் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என காவலர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
English Summary
water flow to Dharmapuri Okenakkal has decreased to 43000 cubic feet BUT