புதுவைக்கு வருகை தாருங்கள்.. மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து  அழைப்பு விடுத்த புதுவைப்  பல்கலைக்கழக துணைவேந்தர்!   - Seithipunal
Seithipunal


புதுவைப்  பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு மத்திய கல்வி அமைச்சரை தர்மேந்திர பிரதானைபுது தில்லியில் இன்று சந்தித்து பேசினார்.

புதுவைப்  பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.  இந்த சந்திப்பின் போது, பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட கல்வி முன்னேற்றங்கள், பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை  பிரகாஷ் பாபு, கல்வி அமைச்சருடன் பகிர்ந்துகொண்டார். பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக தேவையான உதவிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதுவைப்  பல்கலைக்கழகத்துக்கு நேரில் வருகை தருமாறும், அங்குள்ள கல்வி திட்டங்களை நேரில் பார்வையிடவும்  பேராசிரியர் பிரகாஷ் பாபு அவர்கள் கேட்டுக்கொண்டார்.

குடியரசுத் தலைவரும், புதுவை பல்கலைக்கழகத்தின் விசிட்டருமான திரௌபதி முர்மு, அவர்கள் கடந்த மாதம் பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபுவை புதுவை பல்கலைக்கழகச் சட்டம், 1985 இன் சட்டம் 1 (ஏ) இன் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்.
அதன்படி, புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு அவர்கள் கடந்த 17 மார்ச் 2025 அன்று பொறுப்பெற்று கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Visit New Delhi. Pondicherry University Vice-Chancellor meets Union Education Minister


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->