சற்றுமுன் : கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து..2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி பொம்மி பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குபேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அம்மன் கோவில்பட்டி புதூரில் அருகே விஸ்வநத்தத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் நேற்று சரவெடிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை வழக்கமான பட்டாசு தயாரிப்பு பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுகளை ஆலையில் பின்பகுதியில் குழியில் போட்டு எரிக்கும் பணியில் ஆறுமுகம், தேவேந்திரன் மற்றும் குபேந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், தேவேந்திரன் மற்றும் குபேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில், படுகாயமடைந்த தேவேந்திரன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும், குபேந்திரன் மதுரை அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குபேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை அதிகாலை உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar crackers factory fire


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->