விபத்தில் சிக்கி உயிரிழந்த கிராம நிா்வாக அலுவலா் - போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


திருப்பூர், அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 43) இவர் காவுத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் இவர் பெருமாநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அதே பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி மகன் தாமோதரன் (வயது 37) என்பவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் சேதுராமன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

village administration official died


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->