சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விசிக சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர்களின் சட்டமன்ற அலுவலகத்தினை இன்று திறந்து வைத்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகத்தில் 4 இடங்களில் வெற்றி பெற்றனர். திருப்போரூர் மற்றும் செய்யூர் ஆகிய தொகுதிகளில் முன்னதாகவே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைத்த நிலையில், நாகப்பட்டினம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றி பெற்ற சிந்தனைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினத்தில் வெற்றி பெற்ற ஆளூர் ஷாநவாஸ் ஆகிய இருவரின் சட்டமன்ற அலுவலகங்களும் திறக்கப்பட்டன.

காட்டுமன்னார் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி உறுப்பினர் சிந்தனை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியின் அலுவலகத்தினை விசிக தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan Opens MLA Office Cuddalore Kattumannarkoil 11 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->