முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ரோடு ஷோவில் பங்கேற்கிறார்!
Chief Minister M K Stalin is participating in a roadshow tomorrow
மேட்டூர் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நாளை நடைபெறும் 'ரோடு ஷோ'வில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்பங்கேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
திமுக அரசு பொறுப்பேற்று நான்காண்டு முடிவடைந்து ஐந்தாவது ஆண்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒரு ஆண்டு மீதமுள்ள நிலையில் திமுக அரசு தமிழகத்தில் பள்ளியில் நலத்திட்ட பணிகளை தீருபடுத்தி உள்ளது.அடுத்த ஆண்டு 2026 சட்டசபை தேர்தலில் நடைபெறும்.இந்த தேர்தலில் மீண்டும் மக்கள் செல்வாக்கை பெற்று வெற்றி பெற திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது. அதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் மேட்டூர் வருகிறார். அவருக்கு, பவானி-மேட்டூர் சாலை நவப்பட்டி அருகே உள்ள பெரும்பள்ளம் பகுதியில் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மேட்டூர் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ'வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
தொடர்ந்து மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
நாளை மறுநாள் காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார். காலை இரும்பாலை பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
English Summary
Chief Minister M K Stalin is participating in a roadshow tomorrow