மருத்துவ உதவியின்றி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு..அதிர்ச்சி ரிப்போட்!  - Seithipunal
Seithipunal


'இந்தியாவில் மருத்துவ உதவியின்றி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில்  பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய பாதி பேர், மரணிக்கும் சமயத்தில் எந்தவித மருத்துவ உதவியையும் பெறவில்லை என 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை என்றும்  2020 உடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும் என சிவில் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. .

இதேபோல மொத்த இறப்புகளில் எவ்வளவு சதவீதம் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான தரவுகள் இல்லாததால், உண்மையான நிலை இன்னும் மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2021 உடன் ஒப்பிடுகையில்,2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது என்றும் இது 2021 இல் கோவிட்-19 டெல்டா அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது என சிவில் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

2022 இல் வெறும் 22.3% இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவ ரீதியாக காரணம் கண்டறியப்பட்டுள்ளது. முக்கால்வாசி இறப்புகளுக்கான காரணங்கள் வகைப்படுத்தப்படவில்லை. இது மருத்துவ கவனிப்பு இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பாகும் என்றும் சிவில் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட இறப்பு விகிதம்  மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகளைக் காட்டுகிறது. உதாரணமாக, பீகாரில் 5.4%, தமிழ்நாட்டில் 43%, சிக்கிமில் 48.6% MCCD விகிதம் உள்ளது என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2022 இல் இந்தியாவின் சிசு மரண விகிதம்1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 7.54 ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவின் 'நியூபார்ன் ஆக்ஷன் பிளான்' இலக்கை எட்டியுள்ளது. இருப்பினும், மேகாலயா 14.46 ராஜஸ்தான் 12.91, குஜராத் 10.47போன்ற மாநிலங்கள் கவலைக்குரிய நிலையில் உள்ளன.
இந்த தரவுகள் இந்தியாவின் சுகாதார அமைப்பு, இறப்புப் பதிவு மற்றும் சமூக வளர்ச்சியில் உள்ள சவால்களை வெளிப்படுத்துகின்றன என சிவில் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. . 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The number of deaths without medical assistance is increasing Shock report


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->