லியோவை திரையிட விடமாட்டோம்! வாட்டாள் நாகராஜ் திடீர் மிரட்டல்!!
Vattal Nagaraj threatened that Leo will not be screened in karnataka
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக மாநில விவசாயிகளும், சில அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்திற்கு காவிரி நதிநீர் கேட்பதை கண்டித்து தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாட்டர் நாகராஜ் உள்ளிட்ட 80 பேர் தமிழகத்திற்குள் நுழைந்து முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய தமிழக போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ் காவிரி நீரை தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ லியோ படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே லியோ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தை காரணம் காட்டி லியோ படத்தை திரையிட மாட்டோம் என கன்னட அமைப்பினர் மிரட்டல் விடுத்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Vattal Nagaraj threatened that Leo will not be screened in karnataka