தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று..!! - Seithipunal
Seithipunal


வாணிதாசன் : 

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும்.

இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்" வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

இவர் 30 ஆண்டிற்கு மேல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார், எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.

பை தோராய தினம் :

பொதுவாக இத்தினம் ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பையின் மதிப்பு எண்ணளவில் 22/7 (அ) 3.14 ஆகும்.

π தினம் முதன்முறையாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. மேலும் லாரி ஷா (டுயசசல ளூயற) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vanidasan birthday 2021


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->