600 க்கு 600 எடுத்த நந்தினிக்கு சர்ப்ரைஸ்..!! சொன்னதை செய்த கவிஞர் வைரமுத்து..!! - Seithipunal
Seithipunal


அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வரலாற்று சாதனை படைத்த நந்தினிக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவியை நேரில் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி நந்தினியை நேரில் அழைத்து அவரை பாராட்டினார். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் தனது டிவிட்டர் பதிவில் பாராட்டியிருந்தார். அந்த வாழ்த்துப் பதிவில் திண்டுக்கல்லில் நேரில் சந்தித்து தங்க பேனாவை பரிசாக தருகிறேன் என தெரிவித்திருந்தார்.

அதனை நிறைவேற்றும் படி திண்டுக்கல்லுக்கு சென்ற கவிஞர் வைரமுத்து மாணவி நந்தினியின் இல்லத்திற்கு சென்று தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார். கவிஞர் வைரமுத்து திடீரென வருகை புரிந்ததால் திகைத்துப் போன மாணவி நந்தினி குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். மாணவி நந்தினி கல்வியில் மேலும் வளர ஊக்குவிக்கும் விதமாக இந்த பரிசை வழங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu presented gold pen to dindugal nandhini


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->