1 வருடம் சிறை! வைகோ மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு!
vaiko case
2009-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டில் ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மேல்முறையீட்டு வழக்கு, ஜூன் 27-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப் புலிகளை ஆதரித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததாக, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைகோவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறை மற்றும் ₹10,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து வைகோ உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று (ஜூன் 13) வந்த விசாரணையில், அவரின் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி வேல்முருகன் வழக்கை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.