மக்களே...! டாஸ்மாக் கடைகளுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கலாம்...! - புது விதியுடன் தமிழக அரசு - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மொத்தம் 4,777 டாஸ்மாக் ( மதுபான) கடைகள் உள்ளன. இந்த கடைகள் கட்டும்போது, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீ தூரமும் இருக்க வேண்டும் என்பதுதான் விதி.

ஆனால் இந்த விதிகளை மீறி பல மதுபான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுத்தொடர்பாக  பொதுமக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம்.

அதேபோல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு அதற்கான விதியில் தற்போது மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவ்வகையில்,கடை வந்த பிறகு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த கடைகள் மீது புகார்கள் வந்தால், அதனை கலெக்டர் பரிசீலனை செய்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People Lets put an end to TASMAC shops Tamil Nadu government with new rule


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->