ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்..திருமணமான 36 நாளில் கணவனை காலி செய்த மனைவி!
Desire lasts for sixty days Greed lasts for thirty days The wife who emptied her husband in thirty six days after marriage
திருமணமான 36வது நாளில் ஒரு பெண் தனது கணவரை உணவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தநாத் சிங்,இவர் 22 வயது மனைவி சுனிதாவை திருமணம் செய்து சந்தோசமாக குடும்பம் நடத்திவந்துள்ளனர்.இருந்தபோதிலும் திருமணத்திற்கு அடுத்த நாளிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கியதாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
மேலும் மனைவி சுனிதா தனது உறவினர்களிடம் கணவன் புத்தநாத்தை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அஅவருடன் ஒன்றாக வாழ முடியாது என்றும் கூறியிருக்கிறார்.இதையடுத்து இருப்பினும், எந்தப் பிரச்சினையும் இல்லாதது போல், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சுனிதாவை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பினர் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் புத்தநாத் சிங் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்,இறந்தவர் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.புத்தநாத் சிங் தாய், தனது மகன் மருமகளால் கொலை செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து இந்தக் கொலையை செய்த அவரின் 22 வயது மனைவி சுனிதா கைது செய்யப்பட்டுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருமணமான 36வது நாளில் ஒரு பெண் தனது கணவரை உணவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Desire lasts for sixty days Greed lasts for thirty days The wife who emptied her husband in thirty six days after marriage