நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி.. துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெறுவதை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருப்போர்  காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெறுவதை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருப்போர் அவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் உரிமம் பெற்ற 2000 பேர் துப்பாக்கிகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Urban local election for hand over licenced gun


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->