முத்தியால்பேட்டை தொகுதியில் தடையற்ற மின்சாரம்..சட்டமன்ற உறுப்பினர்பிரகாஷ் குமார் உறுதி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் ரங்கவிலாஸ் தோட்டம் திருவள்ளுவர் நகர் கங்கை அம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு ஜோ. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டம் பகுதியில் புதைவிட  கேபிள் அமைக்கும் பணி ரூபாய் 16 லட்சம் செலவில் நடைபெற இருக்கிறது .அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு ஜோ. பிரகாஷ் குமார், தலைமையில் நடைபெற்றது.செயற்பொறியாளர்- நகரம் திரு விமல் குமார் அவர்களும்மற்றும் உதவி பொறியாளர் - நகரம் 2 திரு திலகராஜ் அவர்களும் இளநிலை பொறியாளர் திரு செல்வ முத்தையன் அவர்களும் கலந்துகொண்டு மேற்படி புதைவடை டேபிள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் ஊர்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 இந்த பணி முடிந்தவுடன் ரங்கவிலாஸ் தோட்டம் திருவள்ளுவர் நகர் கங்கை அம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு ஜோ. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uninterrupted power supply in Muthialpet constituency MLA Prakash Kumar confirmed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->