குழந்தையின் கழுத்தை இறுக்கிய தொப்புள் கொடி.. மீறி செவிலியர்கள் மேற்கொண்ட முயற்சி..? இறுதியில் நேரிட்ட பரிதாபம்.!
Umbilical-Cord-Around-Neck
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை இறந்து பிறந்ததால் அரசு மருத்துவர்களை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் அடுத்த புளியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி தேவிப்பிரியாவுக்கு பிரசவத்திற்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நள்ளிரவு இரண்டு மணிவரை கடுமையான வலியால் துடித்த போதும், சிகிச்சை அளிக்க இரண்டு செவிலியர்கள் மட்டுமே வந்துள்ளனர்.
தேவிப்பிரியாவின் மகப்பேறுகால சிகிச்சைக்கான அறிவிப்பு மற்றும் ஸ்கேன் அறிக்கையில் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தும் கூட செவிலியர்கள் பிரசவம் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.இதையறிந்த உறவினர்கள் மருத்துவரின் அலட்சியப் போக்குதான் குழந்தை இறப்பிற்கு காரணம் என மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல் துறையினர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராமநாதன் உறவினர்கள் மற்றும் குழந்தையின் தந்தையிடம் சம்பந்தபட்ட மருத்துவர் மீது புகார் மனு பெற்று துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.
English Summary
Umbilical-Cord-Around-Neck