இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து - கூலி தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மீது பஸ் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அப்பாச்சி. இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அப்பாச்சி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வடுகபாளையம் பகுதியைத் தாண்டி கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அப்பாச்சி படுகாயம் அடைந்த நிலையில், அப்பகுதியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அப்பாச்சி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler bus accident in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->