ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர்.! அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் திகரிபிகரி பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வர், சந்தோஷ். இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். இந்நிலையில் வேலை முடிந்ததும் இரவு ஈஸ்வரும், சந்தோஷம், தார்வார் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது திகரிபிகரி அருகே இருசக்கர வாகனம் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. 

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler accident in Karnataka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->