வங்கியில் கவரிங் நகை மூலம் மோசடி - குற்றவாளிகளை வலைவிரித்து பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை மற்றும் அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை உள்ளிட்ட இரண்டு வங்கிகளிலும், திருக்கோயில்பத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும்  கடந்த ஓராண்டில் இருபத்தேழு முறை இரண்டு கிலோ போலி நகைகளை வைத்து அறுபத்தொன்பது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இரண்டு வங்கிகளின் கிளை மேலாளர்களும் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடியில் ஈடுபட்டு புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த  ரமேஷையும், அவருக்கு உடந்தையாக இருந்த மன்னார்குடியை சேர்ந்த முருகையன் என்பவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இதுபோன்று வேறு எங்காவது போலியாக நகைகளை அடகு வைத்து பண மோசடி செய்துள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for money fraud in thanjavur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->