#நீலகிரி || சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நீலகிரியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி ஊட்டி நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் நேற்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கு மறைத்து வைத்து மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியில் மது விற்பனை செய்த கந்தல்பகுதியை சேர்ந்த தினேஷ் கார்த்திகேயன் மற்றும் விஜயரதன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two people were arrested for selling liquor in Nilgiri


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->