வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளி மற்றும் வீடியோ எடுத்து வெளிட்ட 04 பேர் கைது..!
Accused and 4 others arrested for videotaping Hindu woman sexually abused in Bangladesh
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சம்பவங்கள் மீண்டும் அரங்கேறியுள்ளமை கவலைகளை எழுப்பியுள்ளது. வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தின் கோமில்லா மாவட்டத்தில் முராத்நகரில் உள்ள ராமச்சந்திரபூர் பஞ்சகிட்டா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டில் பாதிக்கப்பட்ட இந்து பெண் ஒருவர் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான அலி, என்பவர் வந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் கிராம மக்கள் அலியை பிடிக்க முயன்ற போது அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். சஅத்துடன், சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணை உதவியற்ற நிலையில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
சில நிமிடங்கள் மட்டும் வெளியான இந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் தனது மரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுவது பதிவாகியுள்ளது.
குறித்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முராத்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முக்கிய குற்றவாளியான அலி மற்றும் வீடியோவைப் பதிவு செய்து பரப்பிய நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். பாலியல் குற்றத்தில் ஈடுபட அலி வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Accused and 4 others arrested for videotaping Hindu woman sexually abused in Bangladesh