பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்..? எடப்பாடி பழனிச்சாமி THUG REPLY..!
Edappadi Palaniswami answers why did you form an alliance with BJP
அதிமுக இதோடு முடிந்து விட்டது என கூறி பகல் கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் 126 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த கூட்டத்தை பார்த்தால் இது பொதுக்கூட்டம் அல்ல. அதிமுகவின் மாநாடு போல் உள்ளது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்று தெரிவித்துள்ளார்.
-8hgkh.png)
அத்துடன், அதிமுக இதோடு முடிந்து விட்டது என கூறி பகல் கனவு காண்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும் என்றும், முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜகவுடன் கூட்டணி என்பதை பொறுக்க முடியவில்லை என்றும், நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. வாக்குகள் சிதறாமல் இருக்கவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-lcb6z.png)
திமுகவின் கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை, சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது..? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அத்துடன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம், குடிநீர் வரி, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி என அனைத்தும் உயர்ந்துவிட்டது என்பதால், இளைஞர்கள் அதிமுகவிற்கு வலுசேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami answers why did you form an alliance with BJP