கிரிக்கெட் போட்டியில் சிக்ஸர் அடித்த அடுத்த நொடி மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு..!
Man dies after fainting seconds after hitting six in cricket match
உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திலேயே மயங்கி விழுந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடந்த உள்ளூர் போட்டியில் ஹர்ஜித் சிங் என்ற பேட்ஸ்மேன், சிக்ஸர் அடித்த சில நொடிகளிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடனடியாக சக வீரர்கள் CPR அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இன்றைய கலகட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சியின் போது இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man dies after fainting seconds after hitting six in cricket match