மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டம் தற்காலிகமாக ரத்து: தேவேந்திர ஃபட்னாவிஸ்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் 01-ஆம் வகுப்பு முதல் 05-ஆம் வகுப்பு வரை, 03-வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப்பெற்றுள்ளது.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம்,மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 01 முதல் 05 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி 03 வது மொழியாக அதாவது கட்டாய மொழியாக மாற்றப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 05-ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது  மஹாராஷ்டிரா அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devendra Fadnavis says Maharashtras three language policy plan has been temporarily suspended


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->