பன்னா சுரங்கத்தில் அதிர்ஷ்டம் கிட்டியது! -ஒரே நாளில் 3 வைரங்கள் கண்டெடுத்த பழங்குடியினப் பெண்...!
Lucky found Panna mine Tribal woman finds 3 diamonds single day
மத்திய பிரதேசம் பன்னா மாவட்டத்தில் இருக்கும் பிரபல வைரச் சுரங்கம், பலரின் கனவுகளை நனவாக்கியிருக்கிறது. அங்கு, ராஜ்பூரை சேர்ந்த பழங்குடியினப் பெண் வினிதா கோண்ட், குத்தகைக்கு எடுக்கப்பட்ட பகுதியில் தேடிக்கொண்டிருக்கும்போது, திடீரென அதிர்ஷ்டம் கிட்டியது.
அவர் ஒரே நேரத்தில் 3 வைரங்களை கண்டெடுத்தார். அவற்றில் ஒன்று 1.48 காரட், மற்றவை 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடையுடையவை. தற்போது அந்த வைரங்கள் அரசாங்கம் மூலம் ஏலத்திற்கு வரவிருக்கின்றன.

மேலும், வியாபாரிகள் கணிப்பின்படி, இவை பல லட்சம் ரூபாய்க்கு செல்ல வாய்ப்புள்ளது. இதுகுறித்து வைர வியாபாரி அனுபம்சிங் தெரிவித்ததாவது,"இந்த 3 வைரங்களில் ஒன்று மிக உயர்தரமானது.
மற்ற இரண்டின் தரம் சாதாரணமாக இருந்தாலும், சந்தையில் நல்ல விலைக்கு போகும்” என்று தெரிவித்தார்.இச்சம்பவம் பன்னா மாவட்டத்தில் வைரம் தேடி வரும் பலருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Lucky found Panna mine Tribal woman finds 3 diamonds single day