திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி...! செல்ஃபி எடுத்த சுற்றுலாப் பயணிகள்...!
RJ Balaji at the Annamalaiyar Temple Tiruvannamalai Tourists taking selfies
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலுக்கு ஆன்மிகச் சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அவரை அடையாளம் கண்டு கொண்ட சம்பவம் அங்கு கவனம் ஈர்த்தது.

கோயிலுக்கு வந்த ஆர்.ஜே.பாலாஜி, மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டார். தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி, சிறப்பு பிரார்த்தனைகளையும் மேற்கொண்டார். சிறிது நேரம் கோயிலில் பக்தியுடன் தரிசனம் செய்த அவர், பின்னர் வெளியே வந்தார்.
அப்போது கோயில் வளாகத்தில் இருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்ததும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். உடனே அவரை அணுகி அன்புடன் உரையாடிய அவர்கள், தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியும் அவர்களுடன் இணைந்து புகைப்படங்களுக்கு முகம் கொடுத்தார். வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட காட்சிகள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தன.
இதனிடையே, சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த ஆர்.ஜே.பாலாஜியிடம் செய்தியாளர்கள் அவரது அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல்களை கேட்டனர். ஆனால், திரைப்படம் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்காமல், புன்னகையுடன் "ஓம் நமசிவாய" என்று மட்டும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். திருவண்ணாமலை கோயிலில் ஆர்.ஜே.பாலாஜியை ஸ்பெயின் சுற்றுலாப் பயணிகள் அடையாளம் கண்டு அன்புடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களிலும் கவனம் பெறும் வகையில் அமைந்தது.
English Summary
RJ Balaji at the Annamalaiyar Temple Tiruvannamalai Tourists taking selfies