திருவாரூரில் 6407 லிட்டர் சாராயம் பறிமுதல் - 225 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் 6407 லிட்டர் சாராயம் பறிமுதல் - 225 பேர் கைது.!!

சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து இருபத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு சாராயம் விற்பனை செய்பவர்கள் மற்றும் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து  நாட்களாக போலீஸார் தீவிர சாராய வேட்டை நடத்தியதில், நேற்று சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தததாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 1,200 லிட்டர் சாராயம் மற்றும் 140 வெளிமாநில மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த  ஐந்து நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் மொத்தம் 225 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 6407 லிட்டர் சாராயம் மற்றும் 400 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுரேஷ்குமார் தெரிவிக்கையில், "மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை தொடரும் என்றும் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two hundrad and twenty five peoples arrested for liquor sale


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->