கால்பந்து போட்டி : கத்தாருக்கு சுமார் 2½ கோடி முட்டைகள் ஏற்றுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், குவைத், ஈரான், கத்தார், மாலத்தீவு மற்றும் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தற்போது கத்தாரில் நடந்துவரும் உலக கால்பந்து போட்டிக்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஏற்கனவே கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கடந்த மாதம் முட்டை ஏற்றுமதி 1½ கோடியாக உயர்ந்தது. ஆனால், அந்த ஏற்றுமதி தற்போது மேலும் 1 கோடி முட்டைகள் கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை மொத்தமாக சுமார் இரண்டு கோடியே 50 லட்சம் முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஜனவரி மாதத்திற்குள் மேலும் இரண்டு கோடி முட்டைகள் வரை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக ஏற்றுமதியாளர் டாக்டர் பி.வி.செந்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two crores fifty lakhs eggs export to qatar for food ball match


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->