பள்ளி மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை.! - Seithipunal
Seithipunal


பள்ளி மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே சீராப்பள்ளி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பி. வீரமுத்து. இவர் அதேபகுதியில் உள்ள விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

மேலும், அந்த மாணவியிடம் நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையே அந்த மாணவி கர்ப்பமடைந்ததால் அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் படி போலீசார் வீரமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

அதில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வீரமுத்துவிற்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடபட்டது. மேலும், இந்த அபராதத்தைக் கட்டத்தவறினால் ஆறு மாதம் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty years jail penalty to old man sexuall harassment


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->