பொங்கல் வடிவில், தமிழகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து! அரசை எச்சரிக்கும் டிடிவி தினகரன்!
TTV Dhibakaran alert Tamilnadu govt for coming pongal Festival
தலைநகர் சென்னையில் இருந்து, பொங்கல் பண்டிகைக்காக சொந்த கிராமங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க இருப்பதால், தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவருடைய டுவிட்டர் பதிவானது, "தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக, நோய் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம்" என தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhibakaran alert Tamilnadu govt for coming pongal Festival