இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ஏப்ரல் 21ம் தேதி திருச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!
Trichy mega employment camp on April 21
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சோந்த வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் ஏப்ரல் 21ம் நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரல் 21ம் தேதி திருச்சி வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமுகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம் என மாவட்ட வேலைவாயப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
English Summary
Trichy mega employment camp on April 21