புதுசு புதுசு! இந்திய ராணுவத்தின் 'மாற்றத்தின் தசாப்தம்' தொழில்நுட்ப சோதனை...! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவம் தற்போது நாடு முழுவதுமுள்ள முக்கிய இடங்களில், விரிவான திறன் மேம்பாட்டு செயல் விளக்கங்களை செய்து  வருகிறது. இதில் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இது பாபினா, பொக்ரான் மற்றும் ஜோஷிமத் துப்பாக்கிச் சூடு களங்களிலும் நடக்கிறது.மேலும், ஆக்ரா மற்றும் கோபால்பூரில் வான் பாதுகாப்பு உபகரண செயல் விளக்கங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த கள சோதனைகள் போர் நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகின்றன. அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கடுமையாக மதிப்பிடுவதற்கு மின்னணு போர் உருவகப்படுத்துதல்களை ஒருங்கிணைக்கின்றன.

இதனை இதற்கு முன்னதாகவே,  ராணுவத்தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மதிப்பாய்வு செய்திருந்தார்.

மேலும்  பாதுகாப்பு அமைச்சகம், 'இந்த சோதனைகள் இந்திய ராணுவத்தின் 'மாற்றத்தின் தசாப்தம்' என்ற திட்டத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கின்றன என்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விரைவாக உள்வாங்குவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Armys Decade of Change technology test


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->