திருச்சி: காதலியை கொலை செய்ய முயற்சித்து, காதில் விஷம் ஊற்றிய காதலன்..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி வெள்ளனூர் பகுதியை சார்ந்தவர் மனோகரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துள்ள நிலையில், திருச்சி உறையூரை சார்ந்த 19 வயது மாணவியை 3 வருடத்திற்கு முன்னதாக சந்தித்துள்ளார். 

இதன்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், கடந்த சில மாதமாக மணிகண்டனுடன் பழகுவதை மாணவி தவிர்த்து வந்துள்ளார். 

இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாலை 5 மணியளவில் மணிகண்டன் உறையூரில் உள்ள மாணவியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பேசிக்கொண்டு இருக்கையில், மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த கொடூரன் மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், காதில் விஷம் ஊற்றி மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Love boy Murder Attempt Love Girl Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->