ஆசையாக அழைத்த திருநங்கைகள்.. 40 வயது நபருக்கு அடுத்து அரங்கேறிய விபரீதம்.! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 41) . இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அசோக் நகர் 6வது அவென்யூவில் உள்ள ஏடிஎம் மிஷினில் பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்த இருந்தார்.

இதில் தமிழ் செல்வன் மதுபோதையில் வானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த திருநங்கைகள் இருவர் தமிழ்செல்வனிடம் ஆசை வார்த்தைகள் பேசி தனியாக வரும்படி அழைத்துள்ளனர். 

அதற்கு கையில் பணம் இருப்பதால் வர முடியாது என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திருநங்கைகள் தடியை எடுத்து தமிழ்செல்வனின் தலையில் தாக்கி பத்தாயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். 

இதனையடுத்து தமிழ்ச்செல்வன் கேகே நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அசோக் நகர் போலீசில் புகார் செய்த நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருநங்கைகளை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Transgender attack 10000 bit pocket in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->