ஒகேனக்கல்லில் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி வெள்ளம்...! நீடிக்கும் 12000 கனஅடி...! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக, கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் கபினி அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, இந்த அணைகளிலிருந்து தமிழக காவிரி ஆற்றுக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக,  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 12000 கனஅடி நீர் வந்தது, இன்று கூட அதே அளவில் நீர்வரத்து தொடர்ந்து பதிவாகி வருகிறது.

மேலும், அதிக நீர்வரத்து காரணமாக, ஒகேனக்கல்லின் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் முழு வீச்சில் பொங்கி கொட்ட, சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து காவிரி ஆறு அழகை ரசித்தனர்.

அதோடு அருவியில் குளித்து மகிழ்ந்து, மீன் விருந்து சுவைத்து, பூங்கா பகுதியில் குடும்பத்தோடு நேரத்தை கழித்தனர்.இந்நிலையில்,  மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists state joy at Hogenakkal 12000 cubic feet water last


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->