சுற்றுலா சீசன் களைகட்டியது...! - ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9,000 கனஅடியாக குறைந்தது...!
tourist season has been ruined Water flow Okenakkal has decreased to 9000 cubic feet
கர்நாடகா மாநிலத்தின் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து ஏற்றத் தாழ்வாக மாறி வருகிறது. நேற்று (புதன்கிழமை) தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் 14,000 கனஅடி அளவிற்கு நீர் பாய்ந்தது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 9,000 கனஅடியாக குறைந்தது.

இருப்பினும், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி போன்ற இடங்களில் நீர் சத்தமிட்டுப் பாய்ந்து, இயற்கையின் மிருதங்கத்தை ஒலிக்கச் செய்தது. இதனால், ஒகேனக்கல்லின் அழகை காண சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டனர்.மேலும்,பரிசல் பயணத்தில் ஈடுபட்டவர்கள் காவிரி ஆற்றின் நடுவே பாறைகளைக் கடந்து செல்லும் சாகச அனுபவத்தை ரசித்தனர்.
மேலும், தொங்கு பாலத்தின் மீது நின்று நீர்வீழ்ச்சியின் அதிசய காட்சியை மொபைலில் பதிவு செய்ய சுற்றுலா பயணிகள் போட்டியிட்டனர்.மெயின் அருவியில் ஆண்கள் குளித்து மகிழ, பெண்களும் காவிரியின் குளிர்ந்த நீரில் நனைந்து ஆனந்தமடைந்தனர்.
அதன் பின், கடைகளில் வாங்கிய காரமான மீன் சாப்பாட்டை பூங்காவில் அமர்ந்து சுவைத்து மகிழ்ந்தனர்.இதேவேளை, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நிலையை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
tourist season has been ruined Water flow Okenakkal has decreased to 9000 cubic feet