உடுமலை அருகே பரிதாபம்.! யானைத் தாக்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே யானை தாக்கி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அக்பர் அலி. இவர் உட்பட 3 பேர் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்பொழுது திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக அவர்கள் காரில் சென்ற போது நேற்று இரவு சின்னார் பகுதியில் திடீரென யானை ஒன்று சாலையின் நடுவே வந்து நின்றுள்ளது.

இதைப்பார்த்த மூன்று பேரும் பயந்து, காரில் இருந்து இறங்கி ஓடினயுள்ளனர். அப்பொழுது அக்பர் அலி யானையின் பிடியில் சிக்கிக் கொண்டதால் யானை தந்ததால் அவரது நெற்றியில் குத்தியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உடுமலை மற்றும் கேரள மாநில வனத்துறையினர் அக்பர் அளவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourist killed after attacked by an elephant near Udumalai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->