பீகாரில் மீண்டும் கள்ளச்சாராய விபத்து…! - ஒருவர் பலி, இருவர் தீவிர சிகிச்சையில்...!
Another liquor accident in Bihar One dead two intensive care
பீகார் மாநிலத்தில் 2016 முதல் முழுமையான மதுவிலக்கு அமலில் இருந்தாலும், சட்டவிரோத கள்ளச்சாராயம் உயிர்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளன.
முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு கடுமையான மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியிருந்தாலும், அதன் பின்னணியில் மறைந்து செயல்படும் கள்ளச்சாராய வியாபாரம் மீண்டும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், கிழக்கு சம்பாரண் மாவட்டம் ரகுநாத்பூர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்து, கள்ளச்சாராயம் அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெறும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனுடன், அதே கள்ளச்சாராயத்தை அருந்தியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கடுமையான பாதிப்புடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச்சாராய விபத்துகள் தொடர்வது, சட்ட அமல்படுத்தலில் உள்ள சவால்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
English Summary
Another liquor accident in Bihar One dead two intensive care